நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

டெல்லியில் மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டி தனது  பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகொள் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் தனது திறமையால் 90ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமாகி இன்று வரை ரசிகர்களுக்காகவும் மாணவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தி வரும் நடிகர் சூர்யா இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இருப்பினும், சமீபத்தில் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்கள் இந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். 

இந்த போராட்டத்தை சுட்டுக்காட்டி தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் சூர்யா தற்போது கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக லாபகரமான திரைப்படமாக கருப்பு திரைப்படம் அமைந்தது 

நடிகர் சூர்யா அடுத்து விஸ்வநாத் அன் சன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset