நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை

டிஜுவானா:

ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில்  உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஈரான் அணி வந்துள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையேயான அரசியல் பதற்றங்கள் 2026 உலகக் கிண்ண பயணத்தை தொடர்ந்து பாதித்து வந்தது.

குறிப்பாக  அந்நாட்டிற்குள் நுழைவதற்கான விசாக்கள் கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட ஈரான் தேசிய அணி, மெக்சிகோவை தங்கள் தள முகாமாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

குரூப் ஜி போட்டிக்கான தயாரிப்பாக, துருக்கியில் மூன்று வார பயிற்சி முகாமை முடித்த ஈரான் அணி, இன்று அதிகாலை மெக்சிகோவின் டிஜுவானாவை வந்தடைந்தது.

வீரர்களும் அணி அதிகாரிகளும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த கவலைகள் காரணமாக, பயிற்சி முகாமை அரிசோனாவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றும் முடிவு கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டதாக ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண முதல் போட்டிக்கு வெறும் 10 நாட்களுக்கு முன்பு, கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து வீரர்களுக்கும் இறுதியாக விசாக்கள் வழங்கப்பட்டபோதிலும், ஆதரவுக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு விசாக்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset