நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதவி விலகலை திரும்பப்பெறுகிறார்: முதல்வர்  டி.கே.சிவகு​மார் அறிவிப்பு 

பெங்களூரு: 

கர்​நாடக முதல்​வ​ராக டி.கே.சிவகு​மார் கடந்த 3-ஆம் தேதி பதவி​யேற்​றார். அவருடன் துணை முதல்​வர் உட்பட 12 அமைச்​சர்​கள் பதவி​யேற்​றனர்.

இதில் மூத்த அமைச்​சர் ராமலிங்க ரெட்​டிக்கு நீர்​வளத் துறை ஒதுக்​கப்​பட்​டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி நேற்று முன்​தினம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பதவி​யேற்ற 2-ஆவது நாளிலே மூத்த‌ அமைச்​சர் ராஜி​னாமா செய்​த​தால் முதல்​வருக்கு நெருக்​கடி ஏற்​பட்​டது.

இதையடுத்து முதல்​வர் டி.கே. சிவகு​மார்,  அவருடன் 2 முறை தொலைபேசி​யில் பேசிய அவர், உடனடி​யாக ராஜி​னாமா கடிதத்​தைத் திரும்​பப் பெறு​மாறு வலி​யுறுத்​தி​னார்.

முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமை​யா​வும் ராமலிங்க ரெட்​டி​யிடம் இதுகுறித்து பேசினார். இதைத் தொடர்ந்து கர்​நாடக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் ரந்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஒரு மணி நேரம் ஆலோ​சித்​தார்.

இந்​நிலை​யில் முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று பெங்​களூருவில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘ராமலிங்க ரெட்டி என் நண்​பர். அவரது பிரச்​சினை பேசி முடித்​தாகி விட்​டது. அவர் எனக்கு வாட்ஸ் அப்​பில் தான் ராஜி​னாமா கடிதம் அனுப்​பி​னார். அதனை திரும்ப பெறு​வ​தாக கூறி​விட்​டார். எனவே அதை பெரிதுபடுத்த வேண்​டாம். புதிய கதைகளை உரு​வாக்கி அரசுக்கு நெருக்​கடி கொடுக்​க வேண்​டாம்​’’ என்​றார்​.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset