செய்திகள் உலகம்
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
நியூயார்க்:
கியூபா மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, அமெரிக்கா கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 66 வயதான டியாஸ்-கனெல், மேலும் நான்கு நபர்கள், கியூபாவின் புரட்சிகர ஆயுதப்படை அமைச்சு உட்பட ஐந்து நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘Specially Designated Nationals (SDN)’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு, ரவுல் காஸ்ட்ரோவிடமிருந்து நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டியாஸ்-கனெல், தற்போது அமெரிக்காவின் புதிய தடைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த மே மாதத்திலும் அமெரிக்கா 11 கியூப அதிகாரிகள் மீது தடைகளை விதித்திருந்ததுடன், 1996ஆம் ஆண்டு கியூப அகதிகள் தொடர்பான சம்பவத்தை முன்வைத்து ரவுல் காஸ்ட்ரோவையும் குற்றஞ்சாட்டியிருந்தது.
கியூபா-அமெரிக்க உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய பொருளாதாரத் தடை இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
