செய்திகள் உலகம்
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
நியூயார்க்:
கியூபா மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, அமெரிக்கா கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 66 வயதான டியாஸ்-கனெல், மேலும் நான்கு நபர்கள், கியூபாவின் புரட்சிகர ஆயுதப்படை அமைச்சு உட்பட ஐந்து நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘Specially Designated Nationals (SDN)’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு, ரவுல் காஸ்ட்ரோவிடமிருந்து நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டியாஸ்-கனெல், தற்போது அமெரிக்காவின் புதிய தடைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த மே மாதத்திலும் அமெரிக்கா 11 கியூப அதிகாரிகள் மீது தடைகளை விதித்திருந்ததுடன், 1996ஆம் ஆண்டு கியூப அகதிகள் தொடர்பான சம்பவத்தை முன்வைத்து ரவுல் காஸ்ட்ரோவையும் குற்றஞ்சாட்டியிருந்தது.
கியூபா-அமெரிக்க உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய பொருளாதாரத் தடை இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
