நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு

நியூயார்க்: 

கியூபா மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, அமெரிக்கா கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 66 வயதான டியாஸ்-கனெல், மேலும் நான்கு நபர்கள், கியூபாவின் புரட்சிகர ஆயுதப்படை அமைச்சு உட்பட ஐந்து நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘Specially Designated Nationals (SDN)’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு, ரவுல் காஸ்ட்ரோவிடமிருந்து நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டியாஸ்-கனெல், தற்போது அமெரிக்காவின் புதிய தடைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த மே மாதத்திலும் அமெரிக்கா 11 கியூப அதிகாரிகள் மீது தடைகளை விதித்திருந்ததுடன், 1996ஆம் ஆண்டு கியூப அகதிகள் தொடர்பான சம்பவத்தை முன்வைத்து ரவுல் காஸ்ட்ரோவையும் குற்றஞ்சாட்டியிருந்தது.

கியூபா-அமெரிக்க உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய பொருளாதாரத் தடை இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset