நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது

ஜாகர்த்தா:

இந்தோனேசியாவில் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி தங்கங் கட்டிகளோடு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவரிடமிருந்து 74 கிலோகிராம் தங்கக் கட்டிகளும் 19 மில்லியன் டாலர் (சுமார் 25 மில்லியன் வெள்ளி) ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் இந்தோனேசியாவின் தலைமை ஊழல் எதிர்ப்புச் சட்ட அதிகாரியாகப் பணிபுரிந்தபோது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

அவருடைய பல வீடுகளிலும் நிலங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்ட பிறகு இம்மாதம் 11ஆம் தேதி அவர் பதவி விலகினார்.

அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மற்றவர்கள் தம்மைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக அவர் கூறினார்.

ஆதாரம்: AFP

​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset