நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம் 

ஜெனிவா- 

இவ்வாண்டு தொடக்கத்தில் ஜெனிவாவிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் இரு விமானிகளும் குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த தகவலை சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது 

விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே விமானப் பணியாளர்கள் தங்கள் கவலைகளை எழுப்பி, மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவித்தனர்.

தங்கும் விடுதியில் இருந்த இரு விமானிகளும் விமான நிலையத்திற்கு வரும் முன்னே அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

அவர்களுக்கு மாற்றாக வேறொரு விமானி பணிக்கு அமர்த்தப்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது. 

சம்பந்தப்பட்ட இரு விமானிகளும் இன்னும் பணி இடைநீக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறறு வருவதாக அந்நிறுவனம் கூறியது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset