செய்திகள் உலகம்
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
ஜெனிவா-
இவ்வாண்டு தொடக்கத்தில் ஜெனிவாவிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் இரு விமானிகளும் குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த தகவலை சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது
விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே விமானப் பணியாளர்கள் தங்கள் கவலைகளை எழுப்பி, மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவித்தனர்.
தங்கும் விடுதியில் இருந்த இரு விமானிகளும் விமான நிலையத்திற்கு வரும் முன்னே அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மாற்றாக வேறொரு விமானி பணிக்கு அமர்த்தப்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட இரு விமானிகளும் இன்னும் பணி இடைநீக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறறு வருவதாக அந்நிறுவனம் கூறியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 10:04 am
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
July 22, 2026, 5:39 pm
பிரிட்டன் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளிகள்
July 21, 2026, 12:39 pm
