நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் நாசி கொரேங்கில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததாக ஆடவர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

NASI GORENG KERANG உணவை 3 பொட்டலமாக தாம் ஆர்டர் செய்ததாகவும் இதனை GRAB FOOD மூலமாக ஆர்டர் எடுத்ததாக 40 வயதுடைய அந்த ஆடவர் குறிப்பிட்டார்.

திடீரென்று அந்த NASI GORENG இல் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று டிக் டாக் சமூக ஊடங்களில் வைரலானது. 

அந்த ஆடவர் பாதிக்கு மேல் உணவை சாப்பிட்டு விட்டதால் திடீரென்று இந்த பூச்சியை பார்த்தார்.

இந்த வீடியோவை 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த கடைக்கு தான் செல்ல மாட்டேன் என்றும் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கும்படியும் அவர் குறிப்பிட்டும் இருந்தார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset