நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா

லிஸ்பன்:

இந்த உல​கக் கிண்ண கால்​பந்து போட்டியில் போர்த்துகல் வீரர் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்​பந்து களத்​தில்) துவம்​சம் செய்​யும் இயந்​திர​மாகவே திகழ்வார்.


அவர் களத்​தில் இருக்​கும் வரை, எதிரி​களுக்கு ஆபத்து எப்​போதும் காத்​திருக்கும் என்று என்று போர்சத்துகல் அணி​யின் முன்​னாள் கோல்​காவலர் ரிகார்டோ பெரைரா தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடு​களில் 2026ஆம் ஆண்​டுக்​கான உலகக் கோப்பை போட்டி வரும் 11ஆம் தேதி தொடங்​க​வுள்​ளது.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் போர்த்துகல் நட்​சத்​திர வீரர் ரொனால்​டோ, 7ஆவது முறை​யாக உலகக் கிண்ண போட்டி​யில் பங்​கேற்​கும் முதல் வீரர் என்ற பெருமை​யைப் பெறவுள்​ளார்.

அர்​ஜெண்​டினா நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்​ஸிக்​கும் இது 7ஆவது உலகக் கோப்பை போட்​டி​யாகும்.

போர்த்துகல் ​சுகல் அணி​யின் கோல்காவலராக இருந்த ரிகார்டோ தற்​போது பயிற்​சி​யாள​ராக மாறி வீரர்​களுக்கு பயிற்​சி​யைத் தந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ குறித்​து, சக அணியின் முன்​னாள் வீரர் ரிகார்டோ நேற்று கூறிய​தாவது:
நான் பார்த்த மிகச்​சிறந்த கால்​பந்து வீரர்​களில் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வும் ஒரு​வர்.

அவர் களத்​தில் இறங்​கி​விட்​டால் அழிக்கும் இயந்​திரம் போன்று செயல்படுவார்.

அவர் களத்​தில் இருந்​தால் எதிரணி வீரர்​களுக்கு ஆபத்​து​தான். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அபாயகர​மான வீர​ராக திகழ்​வார் என்ப​தில் சந்தேகமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset