செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
லிஸ்பன்:
இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்பந்து களத்தில்) துவம்சம் செய்யும் இயந்திரமாகவே திகழ்வார்.
அவர் களத்தில் இருக்கும் வரை, எதிரிகளுக்கு ஆபத்து எப்போதும் காத்திருக்கும் என்று என்று போர்சத்துகல் அணியின் முன்னாள் கோல்காவலர் ரிகார்டோ பெரைரா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் போர்த்துகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 7ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் இது 7ஆவது உலகக் கோப்பை போட்டியாகும்.
போர்த்துகல் சுகல் அணியின் கோல்காவலராக இருந்த ரிகார்டோ தற்போது பயிற்சியாளராக மாறி வீரர்களுக்கு பயிற்சியைத் தந்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து, சக அணியின் முன்னாள் வீரர் ரிகார்டோ நேற்று கூறியதாவது:
நான் பார்த்த மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர்.
அவர் களத்தில் இறங்கிவிட்டால் அழிக்கும் இயந்திரம் போன்று செயல்படுவார்.
அவர் களத்தில் இருந்தால் எதிரணி வீரர்களுக்கு ஆபத்துதான். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அபாயகரமான வீரராக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பராகுவேவை வீழ்த்தியது அமெரிக்கா
June 13, 2026, 11:35 am
உலகக் கிண்ண கால்பந்து: கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 13, 2026, 11:12 am
உலகக்கோப்பைக்காக மாற்றம் கண்ட அரங்குகள்: ஸ்பான்சர் பெயர்களை நீக்கிய ஃபிஃபா
June 12, 2026, 11:08 pm
FIFA WC 2026: தென் கொரியாவின் அசத்தல் வெற்றி
June 12, 2026, 4:19 pm
உலக தரவரிசையில் 136வது இடத்தை எட்டிய ஹரிமாவ் மலாயா
June 12, 2026, 10:03 am
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோலாகலமாக தொடங்கியது
June 11, 2026, 11:30 am
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஆட்டத்தின் முகத்தையே மாற்ற அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள்
June 11, 2026, 8:38 am
