நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு

ஹைதராபாத்: 

நீண்டகால இராஜதந்திர மரபை உடைத்து, சவுதி அரேபியாவுக்கான தனது முதல் இஸ்லாமியர் அல்லாத தூதராக விபுலை இந்தியா நியமித்துள்ளது.

தற்போது கத்தாருக்கான இந்திய தூதராகப் பணியாற்றி வரும் விபுல், விரைவில் ரியாத்தில் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் இரு புனிதத் தலங்களான மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுந் நபவி அமைந்துள்ள சவுதி அரேபியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், பாரம்பரியமாக முஸ்லிம் இராஜதந்திரிகளே அந்நாட்டிற்கான தூதர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்த புதிய நியமனம், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை, இராஜதந்திர அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் சுமார் 27 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருவதுடன், ஆண்டுதோறும் 1.75 லட்சத்திற்கும் அதிகமான இந்திய ஹஜ் யாத்திரிகர்கள் அந்நாட்டிற்குச் செல்கின்றனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset