செய்திகள் மலேசியா
இந்த நேரத்தில் பணிகளை முடிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை: பிரதமர்
கோலாலம்பூர்:
தேர்தல்களை நடத்துவதற்கான தேவையைப் பார்ப்பதை விட, தனது பணிகளை முடிப்பதே இந்த நேரத்தில் அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விரைவில் 16ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
அது அவர்களுடைய முடிவு. அரசாங்கத்திற்கு என பல முன்னுரிமைகள் உள்ளன.
நாங்கள் எங்கள் பணியில் (நாட்டை ஆள்வதில்) கவனம் செலுத்துகிறோம்.
இன்று இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற எரிசக்தி மாற்ற மாநாட்டுத் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 12:07 pm
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
June 4, 2026, 10:21 am
எரிசக்தி மாற்றத்தில் மலேசியாவின் புதிய பயணம்: ETCon26 மாநாட்டை இன்று தொடக்கிவைக்கும் பிரதமர்
June 3, 2026, 11:29 pm
முக்கிய மலாய் கட்சிகளின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கலாம்: துவான் இப்ராஹிம்
June 3, 2026, 11:07 pm
எதிர்ப்பைத் தொடர்ந்து ஹலால் சின்னத்தை அகற்றும்படி பினாங்கு காபி கடைக்கு உத்தரவிடப்பட்டது
June 3, 2026, 11:03 pm
