செய்திகள் இந்தியா
டெல்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி:
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று (ஜூன் 3) காலை 9.40 மணியளவில் - மலேசிய நேரம் பிற்பகல் 12.05 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதில், காயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
காவல்துறையின் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 12:57 pm
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
May 29, 2026, 9:52 am
இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்
May 29, 2026, 8:34 am
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
May 28, 2026, 8:23 pm
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
May 27, 2026, 2:11 pm
ஈரானில் தடுத்து வைக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்
May 25, 2026, 10:35 am
