செய்திகள் உலகம்
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
ஜெனிவா:
ஐக்கிய நாடுகள் அவையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் 81 ஆவது அவையின் தலைவருக்கான தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான், சிப்ரஸ் நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற அவைக்குத் தலைமை வகிப்பதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 190 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில், பெரும்பான்மைக்கு 96 வாக்குகள் பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்தத் தேர்தலில், ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் 91 வாக்குகள் பெற்ற நிலையில், வங்கதேசத்தின் கலீலுர் ரஹ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஐ.நா.வின் 81 ஆவது அவைக்கு கலீலுர் ரஹ்மான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
பெரும் தீ விபத்தில் ஒரே இரவில் வீடிழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்
June 2, 2026, 2:07 pm
ஜப்பானில் ஜாங்மி புயல்: 200க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து
May 30, 2026, 3:19 pm
பிரபல ஷாவ்லின் கோவில் முன்னாள் தலைவருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை
May 30, 2026, 11:16 am
