செய்திகள் உலகம்
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
ரியாத்:
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத் தரவுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களும் அப்கேக் வளாகத்திலிருந்து அடர்ந்த புகை மேகங்கள் எழும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை கையாளும் இந்த ஆலை, சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சவூதி அரேபியா தனது கிழக்கு மாகாணங்களிலிருந்து செங்கடலில் உள்ள ‘யான்பு துறைமுகத்திற்கு எண்ணெய் அனுப்பக் கிழக்கு-மேற்கு குழாய்களைப் பயன்படுத்தி வந்தது. இந்த வழித்தடத்தையே ஹவுதி போராட்டவாதிகள் குறிவைத்துள்ளனர்.
சவூதி விமானப்படை யேமனிலுள்ள ஹவுதி இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதன் விளைவே இது என்று கூறப்படுகிறது
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 11:39 am
அமெரிக்காவின் சியெட்டலில் துப்பாக்கி சூடு சம்பவம்: 15 வயது இளைஞரைக் கைது செய்தது போலிஸ்
July 27, 2026, 11:18 am
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
July 27, 2026, 11:17 am
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
