நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் சியெட்டலில் துப்பாக்கி சூடு சம்பவம்: 15 வயது இளைஞரைக் கைது செய்தது போலிஸ் 

சியெட்டல்: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் சியெட்டல் நகரில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் 15 வயது இளைஞரைப் போலிஸ் கைது செய்துள்ளது. 

இந்த தகவலை சியெட்டல் நகரின் மேயர் கெதி வில்சன் உறுதிப்படுத்தினார். 

திங்கட்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வில்சன், அந்த நிகழ்வில் குறைந்தது இரண்டு பேர் துப்பாக்கிச் சண்டை நடத்தியதாகக் கூறினார்.

புகழ்பெற்ற ஸ்பேஸ் நீடில் அருகே, உணவு விற்பனையாளர்கள், நேரடி இசை மற்றும் பீர் கார்டன் ஆகியவற்றைக் கொண்ட இலவச நிகழ்வான 'பைட் ஆஃப் சியாட்டில்' திருவிழாவின் போது இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த துப்பாக்கி சூட்டினால் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியான வேளையில் மூவர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சியெட்டல் வாழ் மக்களின் பாதுகாப்பிற்கு தாம் முன்னுரிமை அளிப்பேன் என்றும் இந்த விவகாரத்தை கடுமையாக கருதுவதாகவும் அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset