நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 56 தொகுதிகளில் தேசியக் கூட்டணி போட்டியிடுகிறது; 80% தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது: ஷாருடின் ஜமால்

ஜொகூர்பாரு:

வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான ஜொகூர் தேசியக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள், சுமார் 80% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஜொகூர் தேசியக் கூட்டணி தலைவர் ஷாருடின் ஜமால் இதனை தெரிவித்தார்.


மீதமுள்ள 20% இடங்கள் குறித்து மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி),  மூடா, ஐபிஆர் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் தேர்தல் ஒப்பந்தம் மூலமான ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகிறது.

இதுவரை, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 80% இடங்கள் ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டது.

நாங்கள் தெரிவித்தபடி, தேசியக் கூட்டணி அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடும்.

தேர்தல் பிரச்சாரத்தில், பெர்சத்து, பாஸ், கெரக்கான், எம்ஐபிபி ஆகிய நான்கு கூட்டணிக் கட்சிகளின் செயல்பாட்டு அமைப்புகளையும் கூட்டணி செயல்படுத்தியுள்ளது என்று ஷாருடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset