நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி தடம் புரண்ட சம்பவம்; பிரசரானாவுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்கக்கப்படும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

எல்ஆர்டி தடம் புரண்ட சம்பவத்தில் பிரசரானாவுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்கக்கப்படும்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

இச்சம்பவத்தில் பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திற்கு அதிகபட்ச தண்டனை  விதிக்குமாறு நிலப் பொதுப் போக்குவரத்து துறைக்கு (அபாட்) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், பொதுப் பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளாது.

இந்தச் சம்பவத்திற்கான காரணத்தை முழுமையாக விசாரிக்க, போக்குவரத்து அமைச்சு ஒரு சிறப்புப் பணிக்குழுவையும் அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இயக்குநர் குழுவும் பிரசரானா நிர்வாகக் குழுவும் வழக்கம் போல் செயல்பட முடியாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இத்தகைய சம்பவம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் இந்தச் சம்பவத்தில் பிரசரானாவின் உயர் நிர்வாகத்தில் உள்ள எவரும் பொறுப்புக்கூறலில் இருந்து விலக்கு பெற மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset