நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எருமை மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்: ஒருவருக்கு இடது விலா எலும்பு முறிந்தது

ஜொகூர்பாரு:

உலு திராம் பகுதியில் நேற்று நடைபெற்ற பலி சடங்கின்போது எருமை மாடு முட்டிய இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொருவருக்கு இடது விலா எலும்பு முறிவு ஏற்பட்டது.

காலை 10 மணிக்கு காம்பங் தெனாங்கில் நடந்த முதல் சம்பவத்தில், 45 வயதான உள்ளூர் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலிஸ் தலைவர்,  முகமது சுஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

எருமைக் கொம்பால் முட்டியதில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர், இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு இரவு 11 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இடது காலில் ஏற்பட்ட இரத்த நாள (வாஸ்குலர்) காயமே மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கம்போங் சுங்கை டிராம், பத்து 19இல் பிற்பகல் 2 மணிக்கு நடந்த இரண்டாவது சம்பவத்தில், திடீரென வெறிபிடித்த எருமை ஒன்று முட்டியதில் 45 வயதுடைய மற்றொரு உள்ளூர்வாசியும் காயமடைந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

அவர் தற்போது இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset