நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயாவில் புதிய மருத்துவமனைக்காக தாமான் மேடான் விளையாட்டு வளாகத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது

புத்ராஜெயா:

பெட்டாலிங் ஜெயாவில் புதிய  மருத்துவமனைக்காக தாமான் மேடான் விளையாட்டு வளாகத்தை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

சுகாதாரா அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

தாமான் மேடானில் உள்ள ஆறு ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த இடம், தற்போது ஒரு நவீன விளையாட்டு வளாகத்தைக் கொண்டுள்ளது.

இது, பெட்டாலிங் ஜெயா, சுபாங், பூச்சோங் வழித்தடத்தில் உள்ள அதிக மக்கள் அடர்த்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவசரத் தேவையைத் தீர்க்கும் திறன் கொண்டது.

சுகாதார அமைச்சிற்கு சிலாங்கூர் மாநில அரசுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற தொழில்நுட்பக் கூட்டத்தில், எக்ஸ் பார்க் பிஜே சவுத் எனப்படும் வளாகம் புதிய மருத்துவ வசதிக்கான சாத்தியமான இடமாக அடையாளம் காணப்பட்டது.

சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு (பி40) மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு அந்த 15 ஏக்கர் நிலம் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset