நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வர், புத்ரா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்

புத்ராஜெயா:

இன்று காலை இங்குள்ள புத்ரா பள்ளிவாசலில், 10,000 க்கும் மேற்பட்ட தொழுகையாளிகளுடன் சேர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்.

அவருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலும் உடனிருந்தார்.

புத்ரா பள்ளியின் பிரதான இமாம் டாக்டர் முஹம்மத் ஜாகுவா ரோட்ஸாலி தொழுகையை வழிநடத்தினார். மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (ஜாக்கிம்) தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுதீன் சுஹைமியும் உடனிருந்தார்.

காலை 7 மணியளவிலேயே, புத்ரா மசூதியின் வளாகம், தியாகத் திருநாள் தொழுகையின் சூழலைக் காண வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட, ஆயிரக்கணக்கான பொதுமக்களால் நிரம்பத் தொடங்கியது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset