நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இன்று ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மஷாத்:

அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அவரது உடலுக்கு லட்சக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் படுகொலை செய்யப்பட்டார். 

அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேத்தி ஆகியோ​ரும் கொல்லப்பட்டனர்.

போர் தொடர்ந்​த​தால் அவர்​களின் இறு​திச் சடங்கு நடை​பெற​வில்லை.

இந்நிலையில், இன்று ஜூலை 10இல் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினை​விடத்​தில் முறைப்​படி அவரது உடலை ஈரான் நல்​லடக்​கம் செய்தது. அந்த பகுதியில் திரளான மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset