நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ஜகார்தா:

கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது என்று ஃபிஃபா உலகக்கோப்பை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் பேசியுள்ளார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:

தற்போது உலகம் முழுவதும் ஃபிஃபா உலகக்கோப்பை காய்ச்சல் பிடித்திருக்கின்றது. இந்தோனேசியாவுக்கும் கால்பந்து ஆட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதே ஆற்றலையும் உற்சாகத்தையும் இன்று இங்கே கொண்டு வந்துள்ளீர்கள்.

இதில் ஒரு சுவாரஸ்யமான தற்செயலான நிகழ்வும் உள்ளது. நான் இந்தோனேசியாவுக்கு வரும்போதெல்லாம், ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக நான் இந்தோனேசியா வந்தபோது, ஜகார்த்தாவில் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், 2022 ஆம் ஆண்டு பாலியிலும், தற்போது மீண்டும் 2026 ஆம் ஆண்டு ஜகார்த்தாவிலும் நடைபெறுகிறது. என்னுடைய இந்த மூன்று பயணத்தின்போதும் கால்பந்து ஆட்டத்தின் உணர்வால் இந்தோனேசியா அதிர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் பேசினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset