செய்திகள் உலகம்
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
பெய்ஜிங்:
சீனாவில் காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 28 பேர் மாண்டனர்.
தீயை அணைக்க சுமார் 500 தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர்.
சம்பவத்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகச் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) கூறினார்.
விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படவேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
காலணிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசைகள்; அது சார்ந்த இதரப் பொருள்கள் தீயை மூண்டிருக்கக்கூடும் என தீயணைப்பு மேலதிகாரி கூறினார்.
நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட சிலர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
