செய்திகள் உலகம்
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
பெய்ஜிங்:
சீனாவில் காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 28 பேர் மாண்டனர்.
தீயை அணைக்க சுமார் 500 தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர்.
சம்பவத்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகச் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) கூறினார்.
விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படவேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
காலணிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசைகள்; அது சார்ந்த இதரப் பொருள்கள் தீயை மூண்டிருக்கக்கூடும் என தீயணைப்பு மேலதிகாரி கூறினார்.
நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட சிலர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
