நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி

பெய்ஜிங்:

சீனாவில் காலணி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 28 பேர் மாண்டனர்.

தீயை அணைக்க சுமார் 500 தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர்.

சம்பவத்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகச் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) கூறினார்.

விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படவேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

காலணிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசைகள்; அது சார்ந்த இதரப் பொருள்கள் தீயை மூண்டிருக்கக்கூடும் என தீயணைப்பு மேலதிகாரி கூறினார்.

நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட சிலர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset