நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் எரிசக்தி விநியோகம் ஜூலை மாதம் வரை போதுமானது: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியாவின் எரிசக்தி விநியோகம் குறைந்தபட்சம் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இறைவன் நாடினால், அது போதுமானதாக இருக்கும்.

முன்னதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், பொருளாதாரச் சங்கிலியைப் பாதித்து எரிசக்திச் செலவுகளை அதிகரித்த உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் வரை நாட்டின் எரிசக்தி விநியோகப் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் எரிசக்தி விநியோகம் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் இருந்து கூடுதல் விநியோக ஆதாரங்களைப் பெறுவது உள்ளிட்ட முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று இங்குள்ள அல்-முத்தாக்கின் வாங்சாமாஜூ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் ஊடகங்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset