நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் சிங்கப்பூரின் ‘ஸ்னோ சிட்டி’ மூடப்படும்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் முதல் உள்ளரங்கப் பனிவிளையாட்டு நிலையமான ஸ்னோ சிட்டி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி அதன் கதவுகளை நிரந்தரமாக மூடவுள்ளது.

மாறிவரும் வருகையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, நவீனப் பொழுதுபோக்குத் துறைக்கு ஈடாக புதிய அம்சங்களை வழங்கும் நோக்கத்துடன் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அறிவியல் நிலைய நிர்வாக வாரியத்தின் கடப்பாட்டுக்கு உகந்த வகையில் எதிர்காலக் கல்வித் திட்டங்களுக்கும் இலக்குகளுக்கும் ஏற்ப அந்தச் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset