செய்திகள் உலகம்
அமெரிக்க பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொலை: தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் தற்கொலை
சான் டியாகோ:
அமெரிக்காவில் பள்ளிவாசலுக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், சான் டியாகோ மிகப்பெரிய பள்ளிவாசல் வளாகத்திற்கு வெளியே 17, 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
பின் அங்கிருந்து தப்பிய இருவரும் பக்கத்து தெருவில் காரை நிறுத்தி தங்களை தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தனர்.
இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
அதிர்ஷ்டவசமாக பள்ளிவாசலுக்குள் செயல்பட்டு வந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மூவரின் உடலை கைப்பற்றினர்.
பின் பக்கத்து தெருவில் காருக்குள் இறந்து கிடந்த இரு இளைஞர்களின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
பள்ளிவாசலில் இருந்த பாதுகாப்பு அதிகாரி துணிச்சலாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் தனது உயிரை தியாகம் செய்து பலரை காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
