செய்திகள் மலேசியா
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
கோத்தாபாரு:
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாநிலத்தில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
கிளந்தான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு ஒரே ஒரு கொலை வழக்கு மட்டுமே பதிவான நிலையில், இந்த ஆண்டு இதுவரை ஐந்து கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது,.
மேலும் இந்தக் குற்றச்செயல்களை அதிகாரிகளால் கணிப்பதும் தடுப்பதும் கடினம் என்று அவர் விவரித்தார்.
எல்லா கொலை வழக்குகளும் போதைப்பொருளின் தாக்கத்தால் ஏற்படுவதில்லை என்பதால், அதற்கான சரியான காரணத்தை எங்களால் திட்டவட்டமாகக் கண்டறிவது கடினம்.
உதாரணமாக, விசாரணையில் சந்தேக நபரிடம் போதைப்பொருள் இல்லை என்று கண்டறியப்பட்ட போதிலும், சண்டைகள் கொலையில் முடிந்த சம்பவங்களும் உள்ளன.
இந்த அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கிறது.
அவதானிப்புகளின் அடிப்படையில், நம்பிக்கைக் குறைவு, மத நம்பிக்கை இல்லாமை ஆகியவையும், தனிநபர்கள் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கும், பகுத்தறிவை இழக்கும் அளவிற்கும் கோபத்தால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:30 pm
