நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிசி, நிக் நஸ்மி ஆகியோருக்கு எதிராக  10 மில்லியன் ரிங்கிட் உத்தரவாத தொகை நிபந்தனை இன்னும் நடைமுறையில் உள்ளது: ஃபுஸியா

கோலாலம்பூர்:

ரபிசி, நிக் நஸ்மி ஆகியோருக்கு எதிராக 10 மில்லியன் ரிங்கிட் உத்தரவாத தொகை நிபந்தனை இன்னும் நடைமுறையில் உள்ளது.

கெஅடிலான் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே இதனை கூறினார்.

முன்னாள் கெஅசிலான் துணைத் தலைவர் ரபிசி ரம்லி,  முன்னாள் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர், கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முன்பே தங்கள் நாடாளுமன்றப் பதவிகளைக் காலி செய்துவிட்டதாகக் கூறினயுள்ளனர்.

இருந்தாலும்  அவர்கள் இன்னும் 10 மில்லியன் ரிங்கிட் உத்தரவாத தொகை நிபந்தனையில் உள்ளனர்.

கட்சியின் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைக் காலி செய்வதற்கு முன்பே மலேசிய ஐக்கிய கட்சியில் சேர்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

எனவே, கட்சியின் உத்தரவாத தொகை  நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset