நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலமில் அனைத்துலக ஃபேஷன்,  அழகுக்கலை நிபுணர்களுக்கான மாநாடு; அங்கீகரிக்கப்பட்ட தரமான நிபுணர்களை உருவாக்கும்: ஶ்ரீ கீதா

ஷாஆலம்:

அனைத்துலக ஃபேஷன், அழகுக்கலை நிபுணர்களுக்கான மாநாடு அங்கீகரிக்கப்பட்ட தரமான நிபுணர்களை உருவாக்கும் அதன் முதன்மை இலக்காகும்.

ஹெல்திண்ட் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஶ்ரீ கீதா இதனை கூறினார்.

அனைத்துலக ஃபேஷன், அழகுக்கலை நிபுணர்களுக்கான மாநாடு ஷாஆலமில் உள்ள ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்திய ஃபேஷன் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அரவிந்த் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.

இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இம்மாநாட்டில் மலேசியாவைத் தவிர்த்து இந்தியாவில் இருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உலக அளவில் தமிழ் பேசும் ஃபேஷன் வடிவமைப்பாளர்கள்,  கைவினைஞர்களும் தங்கள் திறமைகளை சர்வதேச மேடையில் காட்சிப்படுத்தினர்.

மேலும் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனை கலைஞர்கள்,  ஆரி கைவினைஞர்களை இம்மாநாட்டில் ஒன்றிணைந்தனர்.

ஃபேஷன் துறையில் கலாச்சாரம், புதுமை, சர்வதேச ஒத்துழைப்பு,  நிலைத்தன்மையை மேம்படுத்துதல் இம்மாநாட்டில் முக்கிய நோக்கமாக இருந்தது என்று ஶ்ரீகீதா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset