செய்திகள் மலேசியா
மலேசியாவின் மருத்துவ சுற்றுலாத் துறை தொடர்ந்து வலுவாக உள்ளது: அமீர் ஹம்சா
ஜார்ஜ்டவுன்:
மலேசியாவின் மருத்துவ சுற்றுலாத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது, நாட்டின் உயர்தரமான, மலிவு விலையிலான சுகாதார அமைப்பின் மீது அனைத்துலக சமூகம் வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார சேவைகள் மீது ஆறு சதவீத விற்பனை, சேவை வரி அமல்படுத்தப்பட்ட போதிலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
போட்டித்தன்மை வாய்ந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை நாடும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மலேசியா ஒரு விருப்பமான இடமாகத் தொடர்கிறது.
நாடு தழுவிய முக்கிய சுகாதார மையங்களில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
பினாங்கு, ஜொகூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்துலக நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது நாட்டின் மருத்துவ சுற்றுலாச் சூழலமைப்பின் நெகிழ்வுத்தன்மையை நிரூபிப்பதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
