நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் உறுப்பினர் அந்தஸ்தை தேசியக் கூட்டணி ரத்து செய்தது

கோலாலம்பூர்:

கூட்டணியில் இணைவதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் மஇகாவுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதத்தை தேசியக் கூட்டணி ரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று நடைபெற்ற தேசியக் கூட்டணி உச்ச மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக, பெர்சத்து, தேசியக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மூன்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இருப்பினும், தங்கள் நிலைப்பாடு குறித்து விரைவான முடிவை எடுக்க மஇகா தவறியதால் அதிருப்தி அதிகரித்து வருகிறது. 

இதன் விளைவாக இன்று காலை கோலாலம்பூரில் உள்ள ராயல் சுல்லான் ஹோட்டலில் நடைபெற்ற தேசியக் கூட்டணி உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஒரு மூத்த  தலைவர்  இதனை தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset