செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி முழு பலத்தை நிரூபிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சத்து கட்சி முழு பலத்தை நிரூபிக்க வேண்டும்.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
பெர்சத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையில் வலுவான அரசியல் உறவு இருந்தது. ஆனால் பாஸ் கட்சி இந்த உறவை துண்டித்துக் கொண்டது.
இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்த போதிலும் அரசியலில் இது சகஜமாகும்.
அதே வேளையில் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
குறிப்பாக நெகிரி செம்பிலானில் பெர்சத்து கட்சி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
நெகிரி செம்பிலான் மக்கள் பெர்சத்து கட்சிக்கு முழுமையான ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
பெர்சத்து கட்சியின் வெற்றி அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 10:18 pm
நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து இணைவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்
June 10, 2026, 10:18 pm
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
June 10, 2026, 10:16 pm
சிகாம்புட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கமம்: ஜூன் 14இல் பள்ளி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம்
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 5:51 pm
