நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் சிக்கிய லோரி உட்பட 3 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன

ஜார்ஜ்டவுன்:

ஜார்ஜ்டவுனின் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய லோரி உட்பட 3 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் இதனை கூறினார்.

இன்று இங்குள்ள ஜாலான் மஸ்ஜித் நெகரி, உடினி சாலை சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நடந்த இந்த விபத்தில் சிக்கிய மூன்று வாகனங்கள் தீப்பிடித்தன.

கான்கிரீட் தூண்களை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ஒரு லோரி, தொழிலாளர்களின் வேன், ஒரு கார் ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.

காலை 7.33 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset