நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்

செப்பாங்: 

டிக் டாக்கில் பூடி மடானி ரோன்95 (பூடி95) முன்முயற்சி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதாக, ஒரு தனிப்பட்ட ஓட்டுநர், ஒரு மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படை (ஏ.பி.எம்) தன்னார்வலர் ஆகிய இருவருக்கும், இன்று செப்பாங் செஷன் நீதிமன்றம் தலா 4,000 ரிங்கிட் அபராதத்தை விதித்தது.

நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஒத்மான், 29 வயதுடைய முஹம்மத் ஐமான் ஜைனி சத்தார் மீது தண்டனையை விதித்தார். அந்தக் குற்றத்தை தீவிரமானதாக விவரித்த அவர், இது பொது அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தார்.

அபராதம் செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் அவர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

"இணையப் பதிவுகளின் தாக்கம் தீவிரமானது; அது சில நேரங்களில் குழப்பத்திற்கு வழிவகுக்கும். கவனிக்கப்படாவிட்டால், இத்தகைய செயல்கள் அமைதியின்மையை உருவாக்கலாம். பதிவு செய்யும் போது கவனமாக இருங்கள்" என்று அவர் எச்சரித்தார்.

குற்றச்சாட்டின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர், ஏப்ரல் 4 ஆம் தேதி, எந்தவொரு நபரையும் எரிச்சலடையச் செய்யும் நோக்கத்துடன், ஒரு பொய்யான பதிவை உருவாக்கி, அனுப்பியதாக அறிந்தே செய்துள்ளார். 

1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(a) கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதம், அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

எம்.சி.எம்.சி வழக்குத் தொடரும் அதிகாரி நஸ்ருல் நிஜாம் முஹம்மத் ஜமேரி வழக்குத் தொடர்பு தரப்பில் ஆஜரானார். முஹம்மத் ஐமான் வழக்கறிஞர் எவராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்னர், முஹம்மத் ஐமான், தனது ஒழுங்கற்ற வருமானத்தையும், லுகேமியாவுடன் போராடும் தனது இரண்டரை வயது குழந்தை, தனது மனைவியைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் காரணமாகக் கூறி, குறைந்த தண்டனையை விதிக்குமாறு மன்றாடினார்.

தனித்தனியாக, அதே நீதிபதியின் முன்னிலையில், 46 வயதுடைய ஏ.பி.எம் தன்னார்வலர் ரோம்பஸ்லி சியாம் முஹம்மத் மொக்தார், டிக் டாக்கில் பூடி மடானி ரோன்95 மானியம் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததாக, 4,000 ரிங்கிட் அபராதம் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால், ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றஞ்சாட்டப்பட்டவர், அரசாங்கத்தின் பங்குகள், கொள்கைகளை விளக்குவதற்கு, ஒரு "அரசாங்க முகவராக" செயல்பட்டிருக்க வேண்டும் என்று அஹ்மத் ஃபுவாட் கூறினார். மேலும், அவரது சமூக ஊடகப் பதிவுகளில் மிகவும் கவனமாக இருக்குமாறும் அவரை எச்சரித்தார்.

இருவரும் பின்னர் அபராதத்தைச் செலுத்தினர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset