நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

கூச்சிங்: 

சரவாக் காடுகளில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் டத்தோ அவாங் தெங்கா அலி ஹசன் கூறியுள்ளார்.

சிமுன்ஜான் காடு காப்பகத்தில் 'ஹெமிப்லெக்டா கம்புட்' என்ற புதிய நில நத்தை இனமும், சபால் காடு காப்பகத்தில் 'சுலெட்டாரியா கிமியானா' என்ற புதிய இஞ்சி செடியும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இரு இனங்களும், மாநில கானகத் துறையால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் போது அடையாளம் காணப்பட்டு ஏப்ரல் மாதம் ஒரு கருத்தரங்கில் வழங்கப்பட்டன.

"இந்த இனங்களின் கண்டுபிடிப்பு, நமது இயற்கை வளங்களை நிலைநிறுத்துவதில் தொடர்ச்சியான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று புதன்கிழமை (மே 20) சரவாக் மாநில சட்டமன்றத்தில் இயற்கை வளங்கள், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சு தொடர்பான விஷயங்களை நிறைவு செய்யும் போது அவாங் தெங்கா கூறினார்.

மே மாத நிலவரப்படி, தாத்தா ஜூலான் பாதுகாக்கப்பட்ட காடு (25,501 ஹெக்டேர்), சுரோ-தூத்தோ பாதுகாக்கப்பட்ட காடு (17,117 ஹெக்டேர்), உலு துருசான் பாதுகாக்கப்பட்ட காடு (111,717 ஹெக்டேர்) என மூன்று புதிய நிரந்தரக் காடுகள் மாநில அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது, மாநிலம் முழுவதும் உள்ள மொத்த நிரந்தரக் காடுகளின் நிலப்பரப்பை 4.15 மில்லியன் ஹெக்டேர்களாக உயர்த்தியுள்ளது.

"2021 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில், சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சரவாக் முழுவதும் மொத்தம் 57.75 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன" என்றார் அவர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset