நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா

கோலாலம்பூர்:

செவ்வாய்க்கிழமை பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் போட்டியின் இரண்டு தகுதிச் சுற்றுகளில் முதல் தடையைத் தாண்டி, சுயாதீன ஆண்கள் ஒற்றையர் வீரர் லீ ஜீ ஜியா, தனது ஊக்கமூட்டும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

டென்மார்க்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பையில் தோல்வியில்லாத வெற்றியைப் புதுப்பித்த ஜீ ஜியா, நிமிபுத்ர் அரங்கில், இந்தியாவின் உலகத் தரவரிசை 294 வீரர் மனவ் சௌதரியை 21-19, 21-18 என்ற செட் கணக்கில், 31 நிமிடங்களில் வீழ்த்தினார்.

முன்னாள் ஆசிய சாம்பியனான இவர், சூப்பர் 500 போட்டியின் முக்கிய சுற்றுக்கான இடத்திற்காக, அடுத்து இந்தோனேசியாவின் முஹம்மத் யூசோஃப் அல்லது தைவானின் லியாவ் ஜுவோ ஃபுவை எதிர்கொள்வார்.

மலேசியா காலிறுதியில் வெளியேறிய போதிலும், தாமஸ் கோப்பையில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஜீ ஜியா, அதிலிருந்து நேர்மறையான முடிவுகளை உருவாக்க எதிர்ப்பார்க்கிறார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset