நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாரிஸ்:

டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின்  இந்த ஆண்டின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஎஸ்ஜி அணியின் முன்கள வீரர் உஸ்மான் டெம்பலே, லீக் பட்டத்தை வெல்வதற்கும் ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கும் உதவியதைத் தொடர்ந்து, மீண்டும் லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

28 வயதான இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதைத் தக்கவைத்துக் கொண்டார். 

இதன் மூலம், இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதைச் செய்யும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் ஸ்வீடன் ஜாம்பவான் ஷிலாடன் இப்ராஹிமோவிச், தொடர்ச்சியாக இரண்டு சீசன்களுக்கு இந்த விருதை வென்றிருந்தார்.

ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்வதற்கு முன்பு, தொடர்ச்சியாக ஐந்து முறை இந்த விருதை வென்றிருந்த கிளையன் எம்பாப்பேவுக்குப் பிறகு, கடந்த ஆண்டு டெம்பலே இந்த விருதை வென்றார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset