செய்திகள் உலகம்
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
பேங்காக்:
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra) நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஊழல் குற்றங்களுக்காக 76 வயது தக்சினிற்குச் சென்ற செப்டம்பர் மாதம் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசிய நேரப்படி இன்று காலை 8.40 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியேறினார்.
தக்சினை அவரது குடும்பத்தாரும் பியூ தாய் (Pheu Thai) கட்சி ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அங்கு திரண்டிருந்தனர். சிலர் "we love Thaksin" என்று கோஷமிட்டனர்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு கையசைத்த தக்சின் நிருபர்களிடம் பேசாமல் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அவருடைய தண்டனை காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
சிங்கப்பூரர்கள் இருவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இல்லை: சுகாதார அமைப்பு உறுதி
May 8, 2026, 3:59 pm
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: 2 சிங்கப்பூரர்கள் பலி
May 8, 2026, 2:53 pm
ஹன்தா தொற்று: 2 சிங்கப்பூரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
May 7, 2026, 4:11 pm
