செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் சுத்தமில்லாத 144 உணவுக்கடைகள் மூடப்பட்டன: சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு சுத்தம் இல்லை என்பதற்காக 144 உணவுக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
முந்திய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 132 விழுக்காடு அதிகம்.
2024ஆம் ஆண்டில் 62 உணவுக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
சிங்கப்பூர் உணவு அமைப்பு 2024இல் கழிப்பறைகளைச் சோதிப்பதை அதிகரித்த பிறகு அதிகமான கடைகளில் சுத்தம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
தற்காலிகமாக மூடப்பட்ட உணவுக்கடைகளில் சுமார் 12 விழுக்காடு சில்லறை விற்பனைக் கடைகள் ஆகும்.
மத்தியச் சமையலறைகளில் நடக்கும் குறைபாடுகள் 1 விழுக்காடு குறைந்தன.
உணவு மூலம் பரவுக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.
சென்ற ஆண்டு ஒவ்வொரு 100,000 பேருக்கும் சுமார் 17 பேருக்கு நோய் ஏற்பட்டது. 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 23ஆக இருந்தது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கூறியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 9, 2026, 10:40 am
சிங்கப்பூரர்கள் இருவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இல்லை: சுகாதார அமைப்பு உறுதி
May 8, 2026, 3:59 pm
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: 2 சிங்கப்பூரர்கள் பலி
May 8, 2026, 2:53 pm
ஹன்தா தொற்று: 2 சிங்கப்பூரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
May 7, 2026, 4:11 pm
இந்தோனேசியாவில் எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து: 16 பேர் உயிரிழந்தனர்
May 7, 2026, 9:57 am
