செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து: 16 பேர் உயிரிழந்தனர்
ஜகார்தா:
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து எரிபொருள் லாரி மீது மோதியதில் 16 பேர் மாண்டனர். 4 பேர் காயமுற்றனர். சுமத்ரா தீவின் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நடந்தது.
பேருந்தில் 20 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிய வேளையில் அந்தப் பேருந்து எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் லாரி மீது மோதியது.
விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை சாலையின் வலது பக்கம் திருப்பியிருக்கலாம்.
அப்போது எதிரே எண்ணெய் லாரி அதிக வேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்த அதிகாரி சொன்னார்.
இரு வாகனங்களும் மோதியதில் தீ மூண்டது. பயணிகள் பலரும் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர்.
மாண்டோரில் பேருந்து ஓட்டுநரும் எண்ணெய் லாரி ஓட்டுநரும் அடங்குவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 9:57 am
பெய்ரூட் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா மூத்த தளபதி கொல்லப்பட்டார்
May 6, 2026, 2:43 pm
பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு
May 6, 2026, 10:44 am
ஈரான் போர் மேலும் 2 அல்லது 3 வாரங்கள் நீடிக்கும்: டிரம்ப்
May 6, 2026, 10:35 am
‘வெற்றி நாள்’ கொண்டாட்டத்தின் இடையே கோரம்: உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
May 6, 2026, 10:17 am
தண்ணீரின்றி துடிக்கும் மனித வாழ்வு: நோய்களால் நரகமாக மாறும் காசா
May 6, 2026, 9:57 am
