செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து: 16 பேர் உயிரிழந்தனர்
ஜகார்தா:
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து எரிபொருள் லாரி மீது மோதியதில் 16 பேர் மாண்டனர். 4 பேர் காயமுற்றனர். சுமத்ரா தீவின் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நடந்தது.
பேருந்தில் 20 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிய வேளையில் அந்தப் பேருந்து எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் லாரி மீது மோதியது.
விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை சாலையின் வலது பக்கம் திருப்பியிருக்கலாம்.
அப்போது எதிரே எண்ணெய் லாரி அதிக வேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்த அதிகாரி சொன்னார்.
இரு வாகனங்களும் மோதியதில் தீ மூண்டது. பயணிகள் பலரும் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர்.
மாண்டோரில் பேருந்து ஓட்டுநரும் எண்ணெய் லாரி ஓட்டுநரும் அடங்குவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
