செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: சிக்கல்கள் தீரும் வரை புதிய மந்திரி புசாரை நியமிக்க முடியாது
சிரம்பான்:
மாநிலத்தில் உள்ள பண்பாடுகள், அரசியலமைப்பு நெருக்கடி தீர்க்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினரும் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை எளிதில் அடைய முடியாது.
அதன்படி, மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுதீன் ஹருன், மாநில அரசாங்கத்தைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்று டி.ஏ.பி. பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறியுள்ளார்.
"நெகிரி செம்பிலானில் இப்போது அரச தரப்பில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. யாங் டி பெர்துவான் புசாருக்கும், டத்துக்-டத்துக் உண்டாங்கிற்கும் இடையில் இன்னும் பிரச்சினைகள் உள்ளன. அதில் நாங்கள் தலையிட முடியாது. நாங்கள் அரசை மதிக்கிறோம், அது அந்த அரசு தரப்பினிரடையே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
அதனால், நெகிரி செம்பிலான் மந்திரி புசார், மாநில அரசின் நிலை அப்படியே இருக்கும், மேலும் அவை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று லோக் கூறினார்.
"எனவே, எங்கள் நிர்வாகம் 'நிலைமை மாறாமல்' (status quo) உள்ளது. அதாவது, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினரும் மந்திரி புசாராகப் பொறுப்பேற்கும் கேள்வி எழாது.
சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டியிருந்தால் (மந்திரி புசார் பெற்ற ஆதரவு பிரச்சினை காரணமாக), கட்சி இயந்திரம் தயாராக இருக்க வேண்டும் என்று லோக் தெரிவித்துள்ளார்.
"நிச்சயமாக, சட்டமன்றக் கலைப்பையும் கவனிக்க வேண்டும். ஆனால், எப்படியிருந்தாலும், நாம் தயாராக இருக்க வேண்டும். டுன் கலைக்கப்பட்டால், எந்த நேரத்திலும் நாம் களத்தில் இறங்கி, போராடத் தயாராக இருக்க வேண்டும்.
மக்களின் ஆணையை மீண்டும் பெற விரும்புகிறோம்" என்றார் அவர்.
மந்திரி புசாரை வீழ்த்தும் எந்தவொரு தரப்பினரும், நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை தீர்மானத்தை மந்திரி புசாருக்கு எதிராக முன்மொழியுமாறு அவர் சவால் விடுத்தார்.
"ஒரு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன, அதாவது மந்திரி புசார் பதவி நீக்கம் செய்யப்படுதல். முதலாவதாக,சட்டமன்றத்தில் அவநம்பிக்கை தீர்மானம் மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அவர் வீழ்ச்சியடைய முடியும்.
"சட்டமன்றத்தில் நாம் தேர்தலில் தோற்றால் அரசாங்கம் வீழ்ச்சியடையும். ஆனால், சட்டமன்றத்தில் நாம் தோற்கவில்லை. வேண்டுகோளின் பேரில் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
"இரண்டாவதாக, எந்தவொரு தரப்பினரிடமும் போதுமான எண்ணிக்கையோடு அவர்களிடம் சத்தியப் பிரமாண அறிக்கைகள் இருந்தால், அவர்களிடம் போதுமான ஆதரவு இருந்தால், அவர்கள் சுல்தானிடம் செல்லலாம்.
"சுல்தான் ஏற்றுக்கொண்டால், புதிய மந்திரி புசார் பதவியேற்பார். இது பேராக்கில் இருந்த அனுபவத்தை எடுத்துக்கொள்வதாகும். எனவே, அது நெகிரி செம்பிலானில் நடக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, மந்திரி புசார் பதவி இறங்க முடியாது, மேலும் அவர் தொடர்ந்து இருப்பார்" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 10:25 am
ஆற்று அரிப்பு ஏற்படும் அபாயம்: மயானத்திற்கு அருகே மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு
May 7, 2026, 10:06 am
தொலைபேசி வழி மோசடி: 8.8 இலட்சம் ரிங்கிட்டை இழந்த வியாபாரி
May 6, 2026, 10:54 pm
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 8 வாகனங்கள் சிக்கின
May 6, 2026, 10:53 pm
