செய்திகள் மலேசியா
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 8 வாகனங்கள் சிக்கின
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக எட்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டன.
கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பணிகளுக்கான மையம் இதனை உறுதிப்படுத்தியது.
ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் அவான் கெசில், தாமான் ஓயூஜி, ஜாலான் கிளாங் லாமாவை நோக்கிச் செல்லும் ஜாலான் கூச்சாய் லாமா, ஸ்ரீ பெட்டாலிங்கை நோக்கிச் செல்லும் கோலாலம்பூர், சிரம்பன் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் நடந்த சம்பவம் குறித்து குழுவிற்கு அவசர அழைப்பு வந்தது.
இதில் ஜாலான் அவான் கெசிலில் ஐந்து வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
ஜாலான் கூச்சாய் லாமா சாலையில் இரண்டு வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இதற்கிடையில், ஸ்ரீ பெட்டாலிங்கை நோக்கிச் செல்லும் கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்ததுடன் ஒரு வாகனம் சிக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2026, 10:53 pm
டென்னோஜி மிருகக்காட்சி சாலையில் டாரா, அமோய், கெலாட் ஆகிய யானைகளின் எடை அதிகரித்துள்ளது
May 6, 2026, 5:14 pm
ஆசிய நாணயச் சந்தையில் புதிய வரலாறு: வலுவடையும் மலேசிய ரிங்கிட்
May 6, 2026, 4:53 pm
