செய்திகள் இந்தியா
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
இஸ்லாமாபாத்:
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது.
ஒமனில் இருந்து எம்வி கவுதம் என்ற கப்பல் இந்தியாவை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.
இந்நிலையில் கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதன் பணியாளர்கள் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் 6 இந்தியர்கள், ஒரு இந்தோனேஷிய நாட்டை சேர்ந்தவர் உட்பட 7 பேர் இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கடலில் சிக்கி தவித்த கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
