செய்திகள் இந்தியா
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
இஸ்லாமாபாத்:
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது.
ஒமனில் இருந்து எம்வி கவுதம் என்ற கப்பல் இந்தியாவை நோக்கி சென்றுகொண்டு இருந்தது.
இந்நிலையில் கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதன் பணியாளர்கள் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் 6 இந்தியர்கள், ஒரு இந்தோனேஷிய நாட்டை சேர்ந்தவர் உட்பட 7 பேர் இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.
இதனையடுத்து பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கடலில் சிக்கி தவித்த கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 11:29 am
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
May 14, 2026, 3:16 pm
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு
May 14, 2026, 10:48 am
இந்தியாவின் மணிப்பூரில் இன வன்முறையில் மூன்று தேவாலயத் தலைவர்கள் உயிரிழந்தனர்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
