நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வணிகர்களுக்குப் பேருதவி; மாரா கடனைச் சீரமைக்கப் புதிய சலுகை

ஷா ஆலம்: 

நாடு முழுவதும் உள்ள மாரா (MARA) நிறுவனத்தின் வணிக வளாகங்களுக்கு 20 விழுக்காடு வாடகைத் தள்ளுபடி வழங்கப்படும் என அதன் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுக்கி அறிவித்துள்ளார். 

உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, சிறு வணிகர்கள், வியாபாரிகளின் நலனுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த வாடகைத் தள்ளுபடி இந்த மாதம் முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. 

வாடகைத் தள்ளுபடி மட்டுமின்றி, மாராவிடம் கடன் பெற்றுப் பொருளாதாரச் சிக்கலில் தவிப்பவர்கள் தங்களின் கடன் திருப்பிச் செலுத்தும் முறையைச் சீரமைத்துக் கொள்ளவும் (Restructuring) வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பணப்புழக்க நெருக்கடியில் இருக்கும் கடனாளிகள் இது குறித்து மாரா அதிகாரிகளுடன் ஆலோசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வணிகர்கள், கடனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட அல்லது மாநில மாரா அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வைப் பெறலாம். 

இந்தச் சலுகை சிறு வியாபாரிகளின் நிதிச் சுமையை ஓரளவுக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற உள்ளூர் அதிகாரிகளும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. 

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset