நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்

புதுடெல்லி:

உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பணிக்குச் சென்ற நபா்கள் ரூ.12.8 லட்சம் கோடியை அதாவது 137 பில்லியன் டாலா்கள் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக புலம்பெயா்ந்தோருக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்தது.

மேலும் ரூ.9.4 லட்சம் கோடிக்கு மேல் அதாவது 100 பில்லியன் டாலா்  வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற ஒரே நாடாகவும் இந்தியா திகழ்கிறது எனவும் அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய 4 நாடுகள் 2024-ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் பணம் பெறும் நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset