செய்திகள் உலகம்
காசா உதவிக்கப்பல் இஸ்ரேலால் தடுப்பு: கிரீட் தீவில் 175 ஆர்வலர்கள் தரை இறக்கம்
ஏதென்ஸ்:
காசா பகுதியை நோக்கிச் சென்ற மனிதாபிமான உதவி படகுத் தொடரை, இஸ்ரேல் படைகள் சர்வதேச கடல் பகுதியில் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, அதில் இருந்த சுமார் 175 ஆர்வலர்கள் கிரேக்கத் தீவுகளில் கரை இறக்கப்பட்டனர்.
AFP தகவலின்படி, பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இவ்வார்வலர்கள், கிரேக்கக் கடலோரக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் தீவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் “Free Palestine” என்ற முழக்கத்தையும் எழுப்பினர்.
50க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட இந்த உதவி படகுத் தொடர், மார்செய், பார்சிலோனா, சைரக்கூஸ் ஆகிய நகரங்களில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மீது விதிக்கப்பட்ட முற்றுகையை உடைத்து, அங்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
இதேவேளை, காசா பகுதி 2007ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல அமைப்புகள், 2023 அக்டோபரில் தொடங்கிய மோதலுக்குப் பின்னர் அங்கு உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் கவலை வெளியிட்டு, கைது செய்யப்பட்ட ஆர்வலர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளன. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, இந்த முயற்சியை “கவன ஈர்ப்பு நடவடிக்கை” என விமர்சித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 2:12 pm
தாய்லாந்தை அச்சுறுத்தும் இரட்டை வானிலை ஆபத்து: ஒரே நேரத்தில் வெயிலும் புயலும்
May 3, 2026, 10:13 am
சர்வதேச கடற்பகுதியில் அத்துமீறல்: ஆர்வலர்கள் கைதுக்கு ஸ்பெயின் கடும் கண்டனம்
May 2, 2026, 1:52 pm
நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஈரான் அறிவிப்பு
May 1, 2026, 3:40 pm
தென் கொரியாவில் கொடூரம்: 8 மாதக் குழந்தையை ரிமோட்டால் அடித்துக் கொன்ற தாய்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
