நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழக மாணவர் 61 முறை குத்திக் கொலை

கோத்தா பாரு:

61 முறை குத்தப்பட்டு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவரின் கொலை வழக்கில் சந்தேக நபர்களான இரண்டு இளைஞர்கள், ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற இரண்டு சந்தேக நபர்களான 60 வயதுடைய ஒரு பெண்ணும், 66 வயதுடைய ஆடவர் ஒருவரும் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவு இன்று மாஜிஸ்திரேட் அமிருல் அஸ்யிராஃப் அப்துல் ரஷித் அவர்களால் பிறப்பிக்கப்பட்டது.

கொலைக் குற்றச்சாட்டிற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.

இதற்கு முன்னர், நான்கு சந்தேக நபர்களும், நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதியில், கெத்தேரேவில் உள்ள தாமான் முர்னி, கம்போங் பெலுகார் லுவாஸ் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் யூசோஃப் மாமட் கூறினார்.

சந்தேக நபர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, மேலும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை முடிவு கிடைத்தது.

வெள்ளிக்கிழமை, பாதிக்கப்பட்டவரின் உடல் கெத்தேரேவின் கம்போங் சிமாவில் சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக முன்னர் செய்தி வெளியிடப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset