நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியாவில் கொடூரம்: 8 மாதக் குழந்தையை ரிமோட்டால் அடித்துக் கொன்ற தாய்

சியோல்:

தனது எட்டு மாத மகனைக் கொன்ற குற்றச்சாட்டில், 30 வயதுக் கடந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று தென் கொரியா அதிகாரிகளின் நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி கொரியா ஹெரால்ட் செய்தி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

குழந்தையைத் துன்புறுத்தியதன் விளைவாக மரணம் ஏற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக வியாங்கி நம்பு மாகாண போலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி,  தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலைக் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் தலையில் அடித்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.

சம்பவத்திற்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர், வியாங்கி மாகாணத்தின் புச்சியோனின் அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மண்டை ஓடு முறிவு உள்ளிட்ட கடுமையான தலைக் காயங்களை பாதிக்கப்பட்டவர் சந்தித்ததாக மருத்துவர் கண்டறிந்தார். மேலும், அந்தக் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்குமாறு பரிந்துரைத்தார். இருப்பினும், குழந்தையின் தாய் சிகிச்சையை அனுமதிக்க மறுத்து, தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஏப்ரல் 13 ஆம் தேதி, வீட்டில் குழந்தை சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்துச் சென்றார். அடுத்த நாள் காலையில் பாதிக்கப்பட்டவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டார்.

வீட்டில் உள்ள சி.சி.டி.வி ஆய்வில், குழந்தையின் பெற்றோர்கள் அந்தக் குழந்தையை அடிக்கடி பல மணி நேரங்கள் தனியாக விட்டுச் செல்வதைக் கண்டறிந்தனர்.

முதலில், குளிக்கும் போது விழுந்ததால் தான் பாதிக்கப்பட்டவர் காயமடைந்ததாக சந்தேக நபர் கூறினார். இருப்பினும், விசாரணையின் போது, அவர் துன்புறுத்தியமாக ஒப்புக்கொண்டார்.

சந்தேக நபரை போலிஸார் கைது செய்தனர். தேசிய தடயவியல் சேவையின் ஆரம்பகால பிரேத பரிசோதனை, தலைக் காயம் காரணமாகவே பாதிக்கப்பட்டவர் இறந்ததாக உறுதிப்படுத்தியது.

விசாரணையின் போது, குழந்தை அழுவதை நிறுத்தவில்லை, உறங்கவும் மறுத்ததால், தான் துன்புறுத்தியதாக செய்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.

அந்த நபர் ஈடுபட்டாரா, அல்லது அந்தத் துன்புறுத்துதல் நடப்பதை அறிந்தும் அனுமதித்தாரா என்பதைத் தீர்மானிக்கும் வகையில், குழந்தையின் தந்தையை ஒரு சாட்சியாக போலிஸார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

சந்தேக நபரைத் தடுத்து வைப்பதற்காக, இன்று ஒரு காவல் உத்தரவுக்கு விண்ணப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset