நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா

கோலாலம்பூர்: 

இன்று அதிகாலை டென்மார்க்கின் ஹார்சென்ஸில் நடைபெற்ற உபர் கோப்பை 2026-ன் குழு B-வின் கடைசிப் போட்டியில், தேசிய மகளிர் பூப்பந்து அணி, ஜப்பானிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

நாட்டின் ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரரான கே. லெட்ஷானா, ஃபோரம் ஹார்சென்ஸ் அரங்கில் ஆட்டத்தை முழு உற்சாகத்துடன் தொடங்கினார். இருப்பினும், உலகின் மூன்றாவது தரவரிசை வீராங்கனை அகானே யமகூச்சியிடம் 19-21, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைய வேண்டியிருந்தது.

முதன்மை இரட்டையர் ஒங் சின் ஈ-எம். தினா, உலகின் ஆறாவது தரவரிசை ஜோடியான யூகி ஃபுகுஷிமா-மாயு மட்சுமோட்டோவிடம் 9-21, 9-21 என்ற கணக்கில் 35 நிமிடங்களில் தோல்வியடைந்ததால், மலேசியாவின் சவால் மேலும் கடினமானது.

நாட்டின் இரண்டாவது ஒற்றையர் வோங் லிங் சிங்கும், தனது எதிராளியின் ஆதிக்கத்தை ஈடுகட்டத் தவறினார். அவர் தோமோகா மியாஸாக்கியிடம் நேர் செட்களில் 16-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இருப்பினும், இரண்டாவது இரட்டையர் லோ ஜீ யூ-நோராக்கிலா மைசாரா ரம்தான், உலகின் ஏழாவது தரவரிசை ஜோடியான ரின் இவனாகா-கீ நாகானிஷியை 21-17, 17-21, 21-19 என்ற கணக்கில் வீழ்த்திய அதிர்ச்சிகரமான வெற்றியின் மூலம், தேசிய அணி ஒரு புள்ளியைப் பெற்றது.

அவர்கள், மூன்றாவது, கடைசி செட்டில் 18-19 எனப் பின்தங்கியிருந்த நிலையில், மீண்டு, அந்த ஆட்டத்தை அழகிய வெற்றியுடன் முடித்து, மிகுந்த போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

கடைசிப் போட்டியில், மூன்றாவது ஒற்றையர் கோ ஜின் வெய், முதல் செட்டை ரிகோவுக்கு எதிராக 21-19 என்ற கணக்கில் வென்றார். இருப்பினும், காயம் காரணமாக அவர் விலகிக் கொள்ள வேண்டியிருந்த நிலையில் இது நான்காவது புள்ளியை ஜப்பானுக்கு வழங்கியது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset