நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல் 

பெய்ஜிங்:

சீனாவுடன் சுமூகமான ராஜீய உறவுகளைக் கொண்டுள்ள மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலான இறக்குமதிப் பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்த வரிச் சலுகை வரும் வெள்ளிக்கிழமை (மே 1) முதல் 2028-ஆம் ஆண்டு, ஏப். 30 வரையில் 2 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு, டிசம்பரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டும் சீனா இந்தச் சலுகையை வழங்கியிருந்தது. தற்போது, அந்தப் பட்டியலில் இல்லாத மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளையும் இதில் இணைத்து, இந்தச் சலுகையை சீனா விரிவுபடுத்தியுள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி அதிகமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால், அந்த கூடுதல் பொருள்களுக்கு வழக்கம் போல வரி வசூலிக்கப்படும் என்று சீனாவின் சுங்க வரி ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset