நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் உள்ள 688 ஆலய விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவை; மக்களை குழப்பக்கூடாது: குணராஜ்

ஷாஆலம்:

சிலாங்கூரில் உள்ள 688 ஆலய விவகாரத்தில் தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும்.

இது மக்களை குழப்பக் கூடாது என்று  செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினரின்  சிலாங்கூரில் உள்ள 688 ஆலயங்கள் தொடர்பான அறிக்கையை நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

அது தெளிவாக விவரிக்கப்படவில்லை. அது மக்களை தவறாக வழிநடத்துவதாக உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் செம்மைப்படுத்தப்பட்டு, முழுமையாக விளக்கப்பட வேண்டும்.

தேசிய இந்து ஆலய வழிகாட்டுதல் குழு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, சமூகத்திடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்,

இந்த எண்ணிக்கை தன்மை,  அளவில் வேறுபடும் பல்வேறு வகையான வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்புள்ளது.

அவற்றில் ஒரு பகுதியில் உள்ள, தனித்தனி அமைப்புகளாகக் கருதப்படும் சிறிய கட்டமைப்புகள். சிறிய சன்னதிகள், தனியார் வீடுகளில் உள்ள வழிபாட்டு இடங்கள் ஆகும்.

இந்த அனைத்து வகைகளையும் உண்மையான அர்த்தத்தில் ஆலயங்கள் என்று சமப்படுத்துவது பொருத்தமற்றது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு எந்தப் புள்ளி விவரங்களையும் அறிவிப்பதற்கு முன்பு, வழிபாட்டுத் தலங்கள் கட்டமைக்கப்பட்ட கோயில்களா, சிறிய சன்னதிகளா அல்லது தனியார் வழிபாட்டுத் தலங்களா என்ற தெளிவான வரையறையின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துவதே மிகவும் துல்லியமான அணுகுமுறையாகும்.

மேலும், சமூகத்தின் உணர்வுகளையும் பக்தர்களின் உண்மையான தேவைகளையும் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

அவர்கள்  அனைவரையும் உள்ளடக்கிய,  விவேகமான முறையில் கையாளப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

எனவே வழங்கப்படும் தரவுகள் துல்லியமாக வெளிப்படையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக  தவறாக வழிநடத்தாத வகையிலும் இருப்பதை உறுதிசெய்ய ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset